ஜீன்ஸ் அணிய மறுத்த மனைவி.. முத்தலாக் கூறிவிட்டு தீக்குளித்த கணவர்..!

Default Image

அமிருதீன் என்பவர் தனது மகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹப்பூரில் உள்ள பில்குவாவில் வசிக்கும் அனஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.  அனாஸின் தனது மனைவிக்கு முத்தலாக் என்று கூறிவிட்டு தனது மாமனார் வீட்டில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனாஸின் மனைவியிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் அனாஸின் தன்னை நடனமாடவும் பாடல்களைப் பாடவும் கட்டாயப்படுத்தினார். மேலும், ஜீன்ஸ் அணிய சொல்லி தன்னை வறுபுறுத்தியதால், எங்கள் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது என கூறினார்.

தகராறு நடந்த இரண்டு நாட்களுக்கு பின், அனஸ் தனது மகளுக்கு முத்தலாக் கூறிவிட்டு தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி, தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாக அந்த பெண்ணின் தந்தை கூறினார். முத்தலாக் நடைமுறை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting