மும்பையில் மேலும் 20 பேர் பலி & 791 பேருக்கு கொரோனா உறுதி

Default Image

மும்பையில் நேற்று மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206  ஆக உயரிந்துள்ள நிலையில் 20,917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் மேலும் 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 14,355 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 528 பேர் உயரிழந்துள்ளனர். மும்பையில் 3,110 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்