முலாயம்சிங் யாதவ் அதிருப்தி….அகிலேஷ் , மாயாவதி கூட்டணியில் சலசலப்பு….!!

Default Image
  • மத்தியில் ஆட்சியை தொடர வேண்டுமென்று பாஜகவும் , மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ்_சும் போட்டியிடும் சூழலில் மாயாவதியும் , அகிலேஷும் கூட்டணி அமைத்துள்ளனர். 
  • உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 38 , சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகல் ஒதுக்கப்பட்டுள்ளது
  • முலாயம்சிங் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி_க்கு ஒதுக்கிய இடங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் மத்திய பிஜேபி அரசு தொடர்ந்து ஆட்சியமைக்கவும் , காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர் .

இந்நிலையில் பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்க கூடிய மாநிலமாக பார்க்கப்படும் உத்தரபிரதேசம் மாநிலம் 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.அதிகமான இடங்களை கொண்டுள்ள இந்த மாநிலம் மீது தேசிய கட்சிகளின் பார்வை தற்போது இருக்கின்றது.

உத்திரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு எதிராக போட்டியிடப்போவதாக அறிவித்தனர்.இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி_களுக்கிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.அதில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் , லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களிடம் பேசிய அக்கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 50 சதவீத இடங்களை விட்டு கொடுத்து ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.தொகுதி பங்கீடு முடிந்த பிறகு இவர் எப்படி பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்