மோடியும்,அமித்ஷாவும் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள்- டெல்லி  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால்

Default Image

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும், அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள் என்று டெல்லி  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்தார் .இந்த அழைப்பை ஏற்று நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள்பங்கேற்றனர்.

இதில் பேசிய டெல்லி  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் ,2019ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும், அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள்.மீண்டும் பதவிக்கு வந்தால், மோடி, அமித்ஷா இருவரும் தேர்தல் நடைமுறைகளை மாற்றி ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவர். நாட்டு மக்களிடையே இருவரும் மதம், சாதி ரீதியான மோதல்களை தூண்டிவிடுகின்றனர் என்று டெல்லி  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்