அமைச்சர் நிலேஷ் உட்பட 180 பயணிகள் சென்ற விமானம் நடுவானில் தீப்பிடித்தது..!

Default Image

கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது.  இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி  தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு மற்றொரு இன்ஜின் மூலமாக மீண்டும் கோவாவிற்கு விமானத்தை திருப்பினார்.வ

கோவாவில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது.இதனால் பயணிகள் எந்தவித சேதமும் இல்லாமல் தப்பித்தனர். இதுபற்றி இதுபற்றி அமைச்சர் நிலேஷ் கூறுகையில் , இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்ததை பார்த்துபயணிகள் பதறினர். ஆனால் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

நாங்கள் வேறு ஒரு  விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளோம் என கூறினார். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்