நதிக்கரையோரம் வருங்கால கணவரை சந்திக்க சென்ற செவிலியர்..! மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை..!

Default Image

நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்.

ஆந்திராவில் விஜயவாடா பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரோடு திருமணம் நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று தனது வருங்கால கணவரை இரவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திக்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மர்ம கும்பல் இவர்களை தாக்கியுள்ளது.

வருங்கால கணவரை பயங்கரமாக தாக்கி அங்கே கட்டி போட்டுள்ளனர். பின்னர், செவிலியரை அந்த மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு நேரம் என்பதால் செவிலியர் உதவிக்கு அழைத்தும் உதவ யாரும் வரவில்லை. பின்னர் இந்த மர்ம கும்பல் படகின் மூலம் ஆற்றில் சென்று தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை குண்டூரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் குண்டூர் போலீசார் உள்ளூரில் இருக்கும் குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பதாக சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பொருட்டு வலைவீசி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்