இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமனம்!

Default Image

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனால் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இதனை தொடர்ந்து, இலங்கை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து புதிய இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோத்தபய ராஜபக்சேவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். மகிந்த ராஜபக்சே ஏற்கனவே 2006 முதல் 2015 காலகட்டத்தில் இலங்கை அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்