எல்லையில் விதிமீறல்கள் கடந்தாண்டை விட சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.! ஜம்மு டி.ஜி.பி தகவல்.!

Default Image

பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 – 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. – ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் .

ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங்  உதம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் தலா ஒரு உடற்பயிற்சிகூடம் கட்டப்பட்டிருந்தது. அதனை மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர், உதம்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, டிஜிபி இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 – 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், ‘ காஷ்மீர் பகுதியில் 2-3 போராளிகளை தவிர ஜம்மு மாகாணத்தில் தீவிரவாதம் பெரும்பாலும் குறைந்துவிட்டது.  போராளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தினத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் அச்சுறுத்தல் ஏறுபடுத்தலாம். அதனை சமாளிக்க நமது அதிகாரிகள் தயாராக உள்ளனர். ‘ எனவும் டிஜிபி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்