ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழப்பு..!

Default Image

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். 

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கி தாக்குதல் நடந்த இடத்தில் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்