காங்கிரஸ் அமைச்சர்களை தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

Default Image

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்.

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பின் காங்கிரஸ் கட்சியின் 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.ராஜினாமா செய்த எல்எல்ஏக்களுக்கு பதவி வழங்கி ராஜினாமாவை திரும்பப்பெற செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்  மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்