நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் உயிர்பிக்கப்படுவார்கள் என நம்பப்பட்டதாம்!

ஆந்திராவில் பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களும் உயிர்பிக்கப்படுவார்கள் என கூறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்களால் இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதிலுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்ற பிள்ளைகளை தாங்களே பாலி கொடுத்த சோகம் கூட இல்லாமல் அவர்களின் தாயார் எரியும் பாடி முன்பதாக நின்று கொண்டிருந்ததும் பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், நரபலிக்காக பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பெண்கள் இருவரையும் நரபலி கொடுக்க வேண்டும் என கூறிய போது அவர்கள் சற்று நேரத்தில் உயிர்பிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டதாம். அதனால் தான் நம்பி பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025