கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய இந்தியா-சீன ராணுவம்!

Default Image

லடாக், கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இந்திய, சீன ராணுவ படைகள், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியது. 

இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ஆம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம்அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சீனாவின் 59 ஆப்களுக்கு இந்தியா தடைவிதித்தது. இது சீனாவிற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. அதன்பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சீனா இறங்கி வர தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், லடாக், கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இருந்து இந்திய, சீன ராணுவ படைகள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்