தடம் மாறி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்திய ரயில்வே ! பின்னணி என்ன ?

Default Image

உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் உள்ளது போல ரயில்வே துறையிலும் தனியாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வரும் ரயில்கள் இனி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.
இதன் முதல் கட்டமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களையும் மற்றும் மலை வழித்தடங்களில் ஓடும் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதே போல தங்க நாற்கர வழித்தடங்கள் என்று கூறப்படும் சில முக்கிய வழித்தடங்களையும் ஒப்பைடைக்க உள்ளனர்.
விளைவுகள் :

ரயில்வே தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதால் முதல் கட்டமாக குறைவாக இருக்கும் பயணக் கட்டணமானது அதிகப்படியாக உயர்த்தும் அபாயம் ஏற்படும்.
 
கடந்த ஆண்டு ரயில்வே துறையின் மொத்த வருமானம் என்பது  12 லட்சம் கோடி ஆகும்.இது இதற்கு முந்தைய வருவாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்