புதுச்சேரியில் இன்று முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை

Default Image

புதுச்சேரியில்  வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கு வேகமாக பரவ வாய்ப்பு அதிகமிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுப்பு வழங்க சுகாதாரத்துறை பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு இன்று முதல் செப்.25ம் தேதி வரை விடுமுறை என அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்