புதுச்சேரியில் இன்று முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரியில்  வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற … Read more

#BREAKING: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் உறுதி!

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 7 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமைக்ரான் தொற்று உறுதியனர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. … Read more

மெகா தடுப்பூசி முகாம் – 1 மணி நிலவரப்படி 6.10 தடுப்பூசி!

மெகா தடுப்பூசி முகாமில் 1 மணி நிலவரப்படி 6.10 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் இன்று 8 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் 1 மணி நிலவரப்படி, இதுவரை 6,10,906 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை தயாராக இருக்க உத்தரவு!

 வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவின் படி மாவட்ட வாரியாக உள்ளாட்சி,வருவாய்,பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து பணிகளை துரித வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுகாதார பணியாளர் குழு 24 மணி நேரமும் மீட்பு பணியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் மருத்துமனைகளில் ஜென்ரேட்டர், மருந்துகள் இருப்பு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும் … Read more

பக்தர்களுக்கு ஐப்.,பூஜைக்கு அனுமதி இல்லை-அறிவித்தது தேவஸ்தானம்

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது கேரளாவில் அமைந்துள்ள பிரதிசித்திபெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வரும் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்படும் இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்மாநில சுகாதாரத் துறை எதிர்ப்பால், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளிவருகிறது. மேலும் கொரோனாத்தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. என்றபோதிலும் கார்த்திகை 1ந்தேதி முதல் நவ., 16 வரை … Read more

சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கடந்த பல மாதங்களாக போடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, தொழில்கள் அனைத்தும் தற்போது அரசு அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா  தடுப்பு … Read more

#BREAKING: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,000-ஐ தாண்டியது.!

தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1146 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 20,993 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் … Read more

#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது.!

தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 13,370 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த … Read more

#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா.! 9 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11, 640 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த … Read more

#Breaking: தமிழகத்தில் 16000 ஐ கடந்தது கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோன தோற்றால் மொத்தமாக 111 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 587 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக … Read more