டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலையில்  முன்னேற்றம்.

Default Image

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலையில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவர், கொரோனா தொற்றுடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்துள்ள காரணத்தால் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையின் ஐ.சி.யு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இவரது உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று துணை முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்