குட் நியூஸ்: 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவக்கம்.!

Default Image

ஜூன் 1  முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1  முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று  தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும், விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது. இந்த ரயிலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ரயில் சேவை கிடையாது என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY