10-ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதிய முன்னாள் முதல்வர்..!

Default Image

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார்.

நேற்று ஹரியானாவின் முன்னாள் மாநில முதல்வர் மற்றும் இந்திய தேசிய லோக் தள் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார். இவர் சிர்சாவில் இருக்கும் ஆர்யா கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த தேர்வை எழுதியுள்ளார்.

இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் வேறொருவர் இவரது தேர்வை எழுதுவதற்கு அனுமதி வாங்கியிருந்துள்ளார். அதனால் இந்த தேர்வை இவர் 2 மணி நேரத்தில் எழுத்தாளர் உதவியோடு முடித்துள்ளார். இதற்கு முன்னர் இவர் ஹரியானாவின் திறந்தவெளி வாரியம் நடத்திய 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதுவதற்காக பங்கு கொண்டார்.

இவர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதாத காரணத்தால் இவரது 12 ஆம் வகுப்பு தேர்வின் முடிவுகளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்படவில்லை. இதனால் தற்போது இவர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court
Donald Trump Pakistanis