டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தொடர்ந்து, மேலும் 47 செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி!

Default Image

டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தொடர்ந்து, மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாகவும், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.

அந்தவகையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், மத்திய அரசு கடந்த ஜூன் மாதம், 29-ம் தேதி தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, டிக்டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, அந்த செயலிகளின் தொடர்புடைய 47 குளோன் செயலிகளை தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட குளோன் செயலிகளில் டிக்டோக் லைட், ஹெலோ லைட், ஷேர் லைட், பிகோ லைவ் லைட் மற்றும் விஎஃப்ஒ லைட் ஆகியவை அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்