சுரங்கத்தினுள் வெள்ள நீர்….15 தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல்….!!

Default Image

மேகலயாவில் உள்ள சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள  15 பேரை மீட்பதில் தொடர்ந்து   சிக்கல் ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேகலயா மாநிலத்தில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தில் இருக்கும் லைத்தின் ஆற்றினில் சென்ற மாதம் 13-ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அங்கு இருக்கும் சுரங்கம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்தது.இதனால் சுரங்கத்திற்குள் வேலைசெய்து கொண்டு இருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.இது வரை சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த 5 தொழிலாளர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் மேலும் சுரங்கத்தில் உள்ள15 தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் நீடிக்கின்றது.குறிப்பாக சுரங்கம் முழுவதும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் தொடர்ந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது  தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்