விதிகளை பின்பற்றாத பிளிப்கார்ட்- பதஞ்சலிக்கு நோட்டீஸ்!

Default Image

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட் பதஞ்சலி,நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவ்வாறு அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்கவில்லை,மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை ஏன்? நிறுத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது தொடர்பாக விளக்க கேட்டு பிளிப்கார்ட் , பதஞ்சலி ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்