யானை மீட்கும் பணி : படகு கவிழ்ந்ததில் செய்தி தொடர்பாளர் பலி!

Default Image

யானை மீட்கும் பணியை ஒளிப்பதிவாக்க சென்றிருந்த பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் படகு கவிழ்ந்தால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் எனும் பகுதியின் அருகில் உள்ள மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நதியின் நடுப்பகுதிக்கு சென்று மீண்டும் கரைக்கு வர முடியாமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது.

இதனை அடுத்து ஒடிசா பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சக்திவாய்ந்த விசைப்படகில் விரைந்த  மீட்புப்படையினர் யானையை நதிக்குள் சென்று விரட்டினால் மறு கரைக்குச் சென்று விடும் என திட்டமிட்டு சென்றனர். அப்போது பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அரிந்தம் தாஸ் என்பவரும் புகைப்பட கலைஞர்கள் சிலரும் சென்றனர்.

ஆனால், நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதனை அடுத்து படகில் இருந்த அனைவரையும் மீட்க, அடுத்த மீட்பு படையினர் விரைந்து சென்றுள்ளனர். மீட்பு படையினர் 3 பேரையும் அரிந்தம் தாஸ் மற்றும் புகைப்பட கலைஞர்களையும் மீட்பு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், செய்தி தொடர்பாளர் அரிந்தம் தாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் புகைப்பட கலைஞருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் கட்டாக் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03032025
Heavy rains
Narendra Modi lion
mk stalin about all party meeting
Tamilnadu CM MK Stalin
12th Public exam
kl rahul