ஆந்திராவில் கனமழை எதிரொலி : வீடு இடிந்து பெண் ஒருவர் பலி!

Default Image

ஆந்திராவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா எனும் பகுதியில் ஏற்பட்ட அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று ஆந்திராவில் 24 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மேலும் கடலில் நின்று கொண்டிருந்த கப்பல்கள், படகுகள் ஆகியவை கரைக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாக வலுப் பெற்றதால் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நேற்று பெய்த மழையால் ஆந்திராவில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்ததுடன், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் இடிந்து மூழ்கியுள்ளது. இந்நிலையில் அமராவதி அருகே உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்ததன் காரணமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்