போதை பொருள் விவகாரம் – மும்பை நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்யன் கான்!

Default Image

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கைதாகி உள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்.

மும்பையிலிருந்து கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, சுமார் 20 மணி நேரம் 8 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இதன்பின் கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன் கான் உள்பட 3 பேரை இன்று வரை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, அக்டோபர் 11 வரை காவலில் எடுத்து விசாரிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்