உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பலி எண்ணிக்கை அதிகரிப்பு..!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 50 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், இவர்களிடமும் டெங்கு அறிகுறி இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரசோபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பத்து பகுதிகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு 36 முகாம்கள் அமைக்கப்பட்டு 3,719 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக தற்போது டெங்கு மிக அதிக அளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் குழந்தைகள் அதிகம் இருந்ததால் விமர்சனங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price