டெல்லி வன்முறை “திட்டமிட்ட இனப்படுகொலை” -மம்தா பானர்ஜி ..!

Default Image

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட  மோதல் பின்னர்  வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி , டெல்லியில் நடந்து வரும் வன்முறைகள் அனைத்தும் “திட்டமிட்ட இனப்படுகொலை”குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது.

டெல்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது . நான்  வேதனையடைகிறேன். இந்த சம்பவத்தை நான் இனப்படு கொலையாகவே கருதுகிறேன்.இனி இதுபோன்ற நிகழ்வால் மக்கள் உயிரை இழப்பதை நான் விரும்பவில்லை என கூறினார்.

இந்த கலவரத்தில் இவ்வளவு உயிரிழப்பிற்கு  காரணம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தான் என்பதை  உள்துறை அமைச்சர் அமித் ஷா நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்