டெல்லி – ராஜஸ்தான் : 50 மணி நேரத்தில் 350 கி.மீ ஒடிய இராணுவ ஆர்வலர்..!

Default Image

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு இயக்கங்களை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை வைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள சுகர் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் ஓடிச்சென்றே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மார்ச் 29ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய இவர் 50 மணி நேரம் ஓடி உள்ளார். கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றுள்ள சுரேஷ் பிக்சர் எனும் அந்த இளைஞர் கூறுகையில், இந்திய ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தான் நான் ஓடினேன் எனவும், எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர விருப்பம். ஆனால் சேர முடியவில்லை. ராணுவத்தில் சேர்வதற்காக தொடர்ந்து தயாராகி வருகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்