டெல்லி உள்ளாட்சித் தேர்தல்! நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Default Image

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 

டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை , டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 130க்கும் இறப்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றியை பதிவு செய்தது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி மாநில தேர்தல் ஆணையம் (டிஎஸ்இசி) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நோட்டாவுக்கு 8,000 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து வார்டுகளிலும் போட்டியிடாத பல அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட இந்த ஆண்டு நோட்டாவுக்குப் பதிவான ஒட்டுமொத்த வாக்குகள் அதிகம் என கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்