கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை விதிப்பு.!

Default Image
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
  • மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ (Booty Basti) என்ற இடத்தில், கடந்த 2016-ம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அந்த பொறியியல் கல்லூரி மாணவி, அதே வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த சிபிஐ மாணவி கொல்லப்பட்ட பகுதியில் தங்கியிருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல்ராஜ் என்பவனை கைது செய்து சிறையிலடைத்தது. பின்னர் டி.என்.ஏ பரிசோதனை நடத்தி, ஆதாரத்தோடு, குற்றத்தை, சிபிஐ நிரூபித்துள்ளது.

மேலும் வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் மிஸ்ரா, குற்றவாளி ராகுல்ராஜூக்கு, மரண தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்