விவாகரத்து பெற்ற பெண் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு…!

Default Image

மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது தனது மனைவியிடம் இருந்து தனக்கு 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று விவாகரத்து பெற்ற ஆசிரியையின் கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான மனுவில் தனக்கு எவ்வித வருமானமும் இல்லாத பட்சத்தில் தனது மனைவி படிக்க வேண்டும் என்பதற்காக நான் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது எனக்கு என்று எதுவும் கிடையாது, நோய்வாய்ப்பட்டு தவிக்கும் எனக்கு மாதம்தோறும் எனது மனைவியிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்று தரவேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஆஜராகிய ஆசிரியை தனது கணவர் மளிகை கடை மற்றும் சொந்தமாக ஒரு ஆட்டோவும் வைத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

எனவே அந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருவதாகவும், மகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்கு ஆசிரியையாக பணியாற்ற கூடிய மனைவி 3 ஆயிரம் ரூபாய் நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்