தலைநகர் டெல்லியில் மேலும் 4,473 பேருக்கு கொரோனா!

Default Image

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 4,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,30,269 ஆக உயர்ந்துள்ளது. இன்று 62,593 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 23,09,578 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,839 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,313 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை ,194,516 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 36,914 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்