கொரோனா எதிரொலி.. பத்தினம் திட்டா மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு விடுமுறை..

Default Image

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார்.

கொரோனாவால்  பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் வெளி நாடுகளிலிருந்து வரும் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கண்டிப்பாக  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் கே.கே.ஷைலஜா ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டம் மூன்று நாட்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்  10-ம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டு நடைபெறும் எனவும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க்கொடுக்கப்படும் என  கே.கே.ஷைலஜா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்