நீண்ட மீசை வைத்திருந்ததற்காக கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்..!

Default Image

நீண்ட மீசை வைத்திருந்ததற்காக மத்திய பிரதேச கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா என்பவர் நீண்ட மீசை வைத்து இருந்தார். இதையடுத்து, தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டுமாறு கான்ஸ்டபிள் ராகேஷ் ராணாவுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ராகேஷ் ராணா தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டவில்லை.

இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி  என்னிடம் சொன்னதில்லை என ராகேஷ் ராணா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்