மத்திய அமைச்சர் நாக்கை அறுத்துக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு!சர்ச்சையால் சிக்கிய அமைச்சர் ….

Default Image

மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் நாக்கை அறுத்துக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாகக் குருசாந்த் பட்டிதார் என்பவர் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதத்தைப் பெருமையுடன் கூற வேண்டும் என்றும், பெற்றோர் யாரெனத் தெரியாதவர்களே மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அனந்தகுமார் ஹெக்டேயின் இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் குல்பர்க்கா மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினரும் தலித் தலைவருமான குருசாந்த் பட்டிதார் என்பவர், அனந்தகுமார் ஹெக்டேயின் நாக்கை அறுத்துக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்