Default Image

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 நிதியாண்டில் கல்வித்துறைக்கு ரூ .99,300 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் . மத்திய அரசு விரைவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் என்றும், இது குறித்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் பொறுப்பேற்ற பின்னர் புதிய கல்விக் கொள்கையின் வரைவு 2019 மே மாதம் வெளியிடப்பட்டது என்றார் .மேலும்  திறன் மேம்பாட்டிற்காக ரூ .3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்