காலியாக உள்ள 64 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல்? – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Default Image

காலியாக இருக்கும் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் காலியாகவுள்ள 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, காலியாக உள்ள 64 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என மொத்தம் 65 இடங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி குறித்தும் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நடப்பு பீகார் சட்டப்பேரவையில் பதவிக்காலம் நவம்பர் 29-ல் முடிவதால், அதற்குள் தேர்தல் நடத்த ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா பரவல் மத்தியில் தேர்தல் நடத்துவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
ind vs eng odi
tvk vijay
donald trump angry
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad