பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு – நிர்மலா சீதாராமன் தகவல்

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது பெட்ரோல் மீது ரூ.2.50 ,டீசல் மீது ரூ.4 கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோலில் லிட்டருக்கு 2.5 ரூபாயும் டீசலில் லிட்டருக்கு 4 ரூபாயும் உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விற்பனை விலை உயராது என்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025