#BREAKING: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி!

Default Image

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த நபருக்கு குரங்கம்மை உறுதி.

கேரளாவின் மலப்புரம் பகுதியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை உறுதியான நபருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்