#BREAKING: கொரோனாவால் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்திவைப்பு .!

Default Image

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற  21-ம் தொடங்கி 29-ம் தேதி வரை  4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி  அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா  அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் பணியில் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கிகொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதையெடுத்து கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்