#BREAKING: அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – ஹரியானா அரசு அறிவிப்பு

Default Image

ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.

பெண்களுக்கு ரக்ஷாபந்தன் பரிசை வழங்கி, ஹரியானா அரசு இந்த ஆண்டும் ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்