நாளை முதல் பூஸ்டர் டோஸ்.. அதிகபட்சம் கட்டணம் ரூ.150 – மத்திய அரசு

Default Image

இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், 2 தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சம் ரூ.150 வரை மட்டுமே சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தகுதியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் கூறியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்