கொரோனா இல்லாத தாய்க்கு கொரோனா தொற்றோடு பிறந்த குழந்தை..!

Default Image

தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது.

அதன்பிறகு, அடுத்தநாளே இவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாரா விதமாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தாய்க்கு கொரோனா இல்லாதபோது குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை மருத்துவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைக்கு மறுபடியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்