அசோக் லேலண்டில் இம்மாதம் மட்டும் 2 முதல் 15 நாள் வேலையில்லா நாட்கள்! ஊழியர்கள் அதிர்ச்சி!

Default Image

இந்தியாவில் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக உள்நாட்டு உற்பத்தி திறன் வெகுவாக குறைந்தது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை காரணம் காட்டி வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன.

இந்த வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் 2 முதல் 15 நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவுப்பு நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கும் பொருந்தும் என கூறப்பட்டள்ளது.
இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்திற்கு கூறுகையில், விற்பனை அளவை கருத்தில் கொண்டு, உற்பத்தி அளவை முறைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்