ஸ்ரீநகர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை..!

Default Image

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தல் உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள்.

கொலை செய்யப்பட்ட இருவரிடமும் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஸ்ரீநகரில் மேலும் ஒரு அடையாளம் தெரியாத தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly