இன்று முதல் மக்களின் பார்வைக்கு உலகின் உயரமான அம்பேத்கர் சிலை.!

Ambedkar Statue

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் Dr. BR அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று திறக்கப்பட்ட அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை பொது மக்கள் இன்று முதல் பார்வையிடலாம். இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.  ரூ. 404.35 கோடி செலவில் உருவான இந்த சிலை 18.81 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தளம், பசுமை மற்றும் மின் விளக்குகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு..! இன்று முதல் தொடக்கம்.!

கூடுதலாக, இப்பகுதியில் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய புத்தகங்களின் தொகுப்பு மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காட்சிகளுடன் ஒரு நூலகம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்