திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி.!

Default Image

இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் 50 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுஇடங்களிலும் மற்றும் பணி இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவையை தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்