இனி அரசு அலுவலகங்கள், வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.!

அரசு அலுவலகங்கள், வங்கிகள் 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு … Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-15 சுதந்திர தின விழா கொண்டாடப்படும் – முதல்வர்

பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படும். தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட்-5 முதல் யோக மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி கிடையாது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா … Read more

#BREAKING: பள்ளிகள், கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது.!

தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை ஆக-31 ம் தேதி வரை நீட்டிப்பு. தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் சுற்றுலா தளங்கள், அனைத்து மதம் சார்ந்த கூடங்கள் … Read more

தமிழகத்தில் E-PASS நடைமுறை தொடரும் – முதல்வர்

தமிழகத்தில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும், செல்லவும் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் விதிப்பு.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து அபராதமும் வசூலித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதிலிருந்து சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,98,693 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கை மீறி வந்தவா்களிடம் 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிக்கியவா்களிடமிருந்து ரூ.16.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது … Read more

தமிழகம் முழுவதும் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!

5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு  இன்று இரவு  வரை அமலில் உள்ளது. ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட … Read more

மதுரையில் டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு .!

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு என்பதால் டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு. இந்நிலையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி  டீ … Read more

இவர்களெல்லாம் வெளியே வரக்கூடாது – மத்திய அரசு அறிவிப்பு.!

திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு … Read more

இறுதி சடங்கில் இத்தனை நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.!

இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  இந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை நிர்ணயம் செய்வதற்கு மாநில … Read more

திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி.!

இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், … Read more