ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே..!-கைலாஷ் சத்யார்த்தி..!

Default Image

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

வன்முறை அபாயத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சத்யார்த்தியை, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை அன்று எஸ்டிஜி வழக்கறிஞராக நியமித்தார்.

இந்நிலையில் கைலாஷ் சத்யார்த்தி தற்போது தெரிவித்துள்ளதாவது, தலிபான் ஆட்சியின் கீழ் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் குழந்தைகள் நமது குழந்தைகள். எதிர்கால தலைமுறையினருக்கு அவர்களுக்கு தேவையானதை அல்ல, தகுதியானதை வழங்குவோம் என்று கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ளார்.

மேலும் அவர், தனது குழந்தைகள் அறக்கட்டளை மூலம், குழந்தை தொழிலாளர் அச்சுறுத்தலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். தனிமையில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட கொரோனா தொற்றுநோய் உள்ள காலத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மிகவும் சிக்கலான ஒன்று. இந்த நேரங்களில் குழந்தைகளை முன்பு உள்ளதை விடவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும்போதும் மட்டுமே அமைதி, நீதி மற்றும் நிலைத்தன்மை அடைந்து சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்குவர். மேலும், ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்