தன்னை காதலிக்காகத்தால் இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..!

Default Image

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே  ஜகட்புரைச் சார்ந்தவர் அலேக் பரிக்.இவர் கடந்த 26-ம் தேதி இரவு பக்ரி சஹி என்ற இடத்தில்  ஒரு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.  அப்போது திடீரென அலறும்  சத்தம் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது அலேக் கீழே விழுந்து கிடந்தார்.
தன்னுடன் வந்த பெண் தன் மீது ஆசிட் வீசுவதாக கூறி கதறி அழுது உள்ளார்.இதை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இது குறித்து அலேக்கூறுகையில் , அந்த பெண் தன்னை காதலித்து வந்ததாகவும் , எனக்கு அவர் மீது காதல் இல்லை என்றதால் ஆத்திரத்தில் அப்பெண் ஆசிட்டை ஊத்தியதாக கூறினார். ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தான் ஆசிட் வீசப்பட்டதாக கூறுகின்றனர். இதை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்