புனே :விலங்குகள் செய்யும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து நம்மளை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படி தான், புனே நகரின் பரபரப்பான போக்குவரத்தில் மாடு ஒன்று செய்த செயல் நெகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வீடியோவில் ” புனே நகரில் போக்குவரத்தில் சிக்னல் போடப்பட்டு பலரும் தகளுடடைய வாகனத்தை நிறுத்துக்கொண்டு சிக்னலுக்காக காத்திருந்தார்கள். அப்போது அவர்களுடன் மாடு ஒன்றும் சிக்னல் போட்டு அனைவரும் நிற்கிறார்கள் நாமளும் நிற்போம் என்று காத்திருந்தது.
சிக்கனலை பார்த்து கொண்டு மாடு நிற்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த வீடியோவைப் பயன்படுத்திய போக்குவரத்து போலீஸார் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருக்கிறார்கள்.
வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோ பார்த்த நெட்டிசன்கள் ரீல்களைப் பகிர்வதற்குப் பதிலாக, வழக்கமான ரோந்து மற்றும் போக்குவரத்துச் சோதனையைச் செய்யுங்கள் எனவும், னிதர்களை விட விலங்குகள் புத்திசாலிகள் என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு உதாரணம் எனவும் கூறி வருகிறார்கள்.
unknown node